இந்தியாவின் சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக உலக அழகி (மிஸ் யூனிவர்ஸ்) என்ற பட்டத்தை 1994ம் ஆண்டு தட்டிச் சென்றவர், சுஷ்மிதா சென்.
'தஸ்தக்' என்ற இந்தி படத்தில் நடிகையாக தடம் பதித்த சுஷ்மிதா சென், நாகார்ஜுனாவின் ஜோடியாக 'ரட்சகன்' தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தென்னக ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தார்.
இதுவரை 33 படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு அனில் கபூரின் ஜோடியாக 'நோ பிராப்ளம்' இந்தி படத்தில் நடித்திருந்தார்.
அதற்கு பின்னர், நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அலிசா, ரெனீ என்ற 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த சுஷ்மிதா சென், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், பிரபல மேக்-அப் மற்றும் சிகை அலங்கார நிபுணரான அம்பிகா பிள்ளையின் அழகு நிலையத்தின் திறப்பு விழா கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற சுஷ்மிதா சென் (37), 'இங்கிலிஷ்-விங்கிலிஷ் படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்ததை போன்ற பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் தோன்றி மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அவரது ஆசை கைக்கூடலாம் என திரையுலக 'பட்சிகள்' தெரிவிக்கின்றன.
'தஸ்தக்' என்ற இந்தி படத்தில் நடிகையாக தடம் பதித்த சுஷ்மிதா சென், நாகார்ஜுனாவின் ஜோடியாக 'ரட்சகன்' தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தென்னக ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தார்.
இதுவரை 33 படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு அனில் கபூரின் ஜோடியாக 'நோ பிராப்ளம்' இந்தி படத்தில் நடித்திருந்தார்.
அதற்கு பின்னர், நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அலிசா, ரெனீ என்ற 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த சுஷ்மிதா சென், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், பிரபல மேக்-அப் மற்றும் சிகை அலங்கார நிபுணரான அம்பிகா பிள்ளையின் அழகு நிலையத்தின் திறப்பு விழா கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற சுஷ்மிதா சென் (37), 'இங்கிலிஷ்-விங்கிலிஷ் படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்ததை போன்ற பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் தோன்றி மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அவரது ஆசை கைக்கூடலாம் என திரையுலக 'பட்சிகள்' தெரிவிக்கின்றன.