கலைச் சேவைக்கு கிடைக்கும் கவுரவம்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி,சென்னையில், ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், சினிமாவில் நீண்ட காலம் சிறப்பாக பங்களித்து வரும் கலைஞர்களுக்கும், விருது வழங்கி கவுரவிக்கன்றனராம்.அந்த பட்டியலில், தமிழ், தெலுங்கு, சினிமாக்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும், த்ரிஷாவின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம். அதனால், இந்த விழாவில் அவசியம் பங்கேற்று, விருதினை பெற்றுக் கொள்ள ஆவலாக உள்ளார், த்ரிஷா.இதுபற்றி அவர் கூறுகையில்,‘இன்றைய சினிமாவில், என்னைப் போன்ற நடிகைகள், தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவே, கடுமையாக போராட வேண்டியுள்ளது. அதனால், 10 ஆண்டு சினிமாவில் நிலைத்து நின்றதை சாதனையாக கருதி, விருது வழங்குகின்றனர். இது ரொம்ப பெருமையாகவும், இன்னும் சினிமாவில் சாதிக்க தட்டிக் கொடுப்பதை போலவும் உள்ளது’ என்கிறார் த்ரிஷா