தமிழில் முறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, ஏகன், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்தவர் ஜெயராம். இவருக்கு சென்னையில் சொந்த வீடு உள்ளது. கேரளாவில் பெரிய பணக்காரர்கள் வீட்டில் யானை வளர்ப்பது சகஜம். நம்ம ஊரில் கன்னுக்குட்டி வளர்ப்பது போலதான் அவர்களுக்கு யானை வளர்ப்பதும்.
சென்னையில் யானைகள் வளர்ப்பது கடினம். இருந்தாலும் ஜெயராம் தனது வீட்டில் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதற்கு கண்ணன் என பெயரிட்டு பாசத்துடன் பார்த்து வந்தார். சில விளம்பர படங்களில் அந்த யானை, ஜெயராமுடன் நடித்துள்ளது. சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த யானை இறந்துவிட்டது.
யானை இறந்த சோகத்துடன் ஜெயராம் நடமாடி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்கள் வேறொரு யானையை வாங்கி வளருங்களேன் என்கிறார்களாம். இருந்தாலும் கண்ணன் இடத்தை வேறொரு எந்த யானையாலும் நிரப்ப முடியாது என்று கவலை கொள்கிறாராம் அவர்.
சென்னையில் யானைகள் வளர்ப்பது கடினம். இருந்தாலும் ஜெயராம் தனது வீட்டில் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதற்கு கண்ணன் என பெயரிட்டு பாசத்துடன் பார்த்து வந்தார். சில விளம்பர படங்களில் அந்த யானை, ஜெயராமுடன் நடித்துள்ளது. சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த யானை இறந்துவிட்டது.
யானை இறந்த சோகத்துடன் ஜெயராம் நடமாடி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்கள் வேறொரு யானையை வாங்கி வளருங்களேன் என்கிறார்களாம். இருந்தாலும் கண்ணன் இடத்தை வேறொரு எந்த யானையாலும் நிரப்ப முடியாது என்று கவலை கொள்கிறாராம் அவர்.