செந்தீ விழுந்த செம்பொற்பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்

கோச்சடையான் படத்தின்,இறுதிகட்ட பணிகள், வேகமாக நடக்கின்றன. படத்தின், டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. இதுவரை, கோச்சடையான் படத்தின் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்ட படக்குழு, இப்போது, அப்படத்துக்காக, வைரமுத்து எழுதிய பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளனர்.‘செந்தீ விழுந்த 
செம்பொற்பாறையில், மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய், இதயம் உடலில் இருந்து விழுந்து உருண்டு புரண்டு போகுதே என, துவங்கும் அந்த பாடல், துய தமிழில் எழுதப்பட்டுள்ளதாம்.  கதைப்படி, சிறையில் வாடும், ஹீரோ ரஜினியை நினைத்து, ஹீரோயின் தீபிகா, அழுதுகொண்டே பாடுவது போல், இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த பாடல், படமாக்கப்பட்டபோது, தீபிகா, உண்மையிலேயே, அழுது விட்டாராம். அந்த அளவுக்கு, பாடல் வரிகளும், பாடல் காட்சிகளும், உண்மையான காதல் ஏக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததாம்.