தொடர்ச்சியாக மூன்று ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயசேதுபதி. இப்போது கைநிறைய படங்களை வைத்திருக்கிறார். அதோடு தான் நடிக்கிற படங்களில் தனக்கு இணையான வேடங்களை புதிதாக வரும் நடிகர்களுக்கு கொடுத்தாலும் அவர் ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. என்னுடைய கேரக்டர் எனக்கு பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன் என்கிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘எது நல்ல சினிமா என்பதை கதைதான் தீர்மானிக்கிறது. அதில் நடிப்பவர்கள் பொம்மைகள்தான். அப்படி நானும் ஒரு பொம்மையாக செயல்படுகிறேன்,’’ என்று சொல்லும் விஜயசேதுபதி, என்னிடம் கதை சொல்ல இயக்குனர்கள் வரும்போது, அதில் நானே முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்றும் நான் நினைப்பதில்லை.
என்னுடன் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான், அவர்களுடன் போட்டி போட்டு நடிக்க முடியும். என்னைச்சுற்றியுள்ள கேரக்டர்கள் சரியாக நடிக்கவில்லையெனறால், எனது நடிப்பும் எடுபடாது. அதனால் நல்ல திறமையான நடிகர்கள் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று செல்லும் சேதுபதி, இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் ஹீரோ என்பதை மனதில் கொள்ள மாட்டேன். கதை மட்டுமே ஹீரோ. அந்த கதைக்குள் நானும் ஒரு கேரக்டர் அவ்வளவுதான் என்கிறார்
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘எது நல்ல சினிமா என்பதை கதைதான் தீர்மானிக்கிறது. அதில் நடிப்பவர்கள் பொம்மைகள்தான். அப்படி நானும் ஒரு பொம்மையாக செயல்படுகிறேன்,’’ என்று சொல்லும் விஜயசேதுபதி, என்னிடம் கதை சொல்ல இயக்குனர்கள் வரும்போது, அதில் நானே முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்றும் நான் நினைப்பதில்லை.
என்னுடன் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான், அவர்களுடன் போட்டி போட்டு நடிக்க முடியும். என்னைச்சுற்றியுள்ள கேரக்டர்கள் சரியாக நடிக்கவில்லையெனறால், எனது நடிப்பும் எடுபடாது. அதனால் நல்ல திறமையான நடிகர்கள் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று செல்லும் சேதுபதி, இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் ஹீரோ என்பதை மனதில் கொள்ள மாட்டேன். கதை மட்டுமே ஹீரோ. அந்த கதைக்குள் நானும் ஒரு கேரக்டர் அவ்வளவுதான் என்கிறார்